
என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி
இந்த படத்தில் யோகிபாபு இரண்டாவது ஹீரோ மாதிரி நடித்து இருக்கிறார். அவர் என்னிடம் அடிக்கடி கதை சொல்கிறார். விரைவில் இயக்குனர் ஆக வேண்டும். அவர் குறித்து நெகட்டிவ் செய்தி வருகிறது. அது தவறு. அதேபோல் இயக்குனர் மிஷ்கின் கடும் உழைப்பாளி, புத்தகங்களுக்கு மத்தியில் தூங்குகிறார். அவர் மற்ற நல்ல படங்கள் ஓட வேண்டும் என்று மேடைகளில் பேசுகிறார். என்னுடைய கடைசி விவசாயி படத்தை கொண்டாடினார்.
மஹாராஜா, விடுதலை2 படங்களுக்கு பின் ஏஸ் வருகிறது. இதுவும் நல்ல கதை. சிலரை பார்த்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சிலரை பார்த்தாலே பிடிக்காது. அது ஏன் என்று தெரியவில்லை. இந்த பட டிரைலரில் சிவகார்த்திகேயன் பெயர் வருகிறது. ஒரு படம் யாரு மாதிரி இருக்கிறது என கேட்கப்பட அதுக்கு யோகிபாபு கொடுத்த கவுண்டர் அது. இன்னும் 2 ஹீரோ பெயரையும் சொன்னார். என்னை சுயநலத்துக்காக மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!