
சந்தானம் பட பாடல் சர்ச்சை : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்
அதுகுறித்து பேசிய கூல் சுரேஷ், ‛‛என் நண்பன் சந்தானம் கடவுள் பக்தி உடையவர். அவர் காரில் அவ்வளவு சாமி படங்கள், வேப்பிலை இருக்கும். அவர் கோவிந்தா பாடலை அவமதிக்கமாட்டார். ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் அந்த பாடலை எதிர்க்கிறார்கள். திருப்பதிக்குள் தமிழர்களை விடமாட்டோம் என்கிறார்கள். அது தவறு. திருப்பதி பெருமாள் படத்தை வீட்டில் வைத்து கூட கும்பிடுவோம். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஒரு நடிகர்தான். அவருக்கு சினிமா கஷ்டம் தெரியும்.
இந்த படத்தை அவர், அவர் தரப்பு பார்த்துவிட்டு பேச வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் நண்பன் சந்தானம் படத்துக்கு பிரச்னைகள் வர வேண்டாம். அது நல்ல படியாக ரிலீஸ் ஆக வேண்டும். பவன் கல்யாண் அவர்களே உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என மேடையில் விழுந்து வணங்கினார் கூல் சுரேஷ். பேசும்போது பல இடங்களில் கண் கலங்கினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!