
பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன்
மூக்கன் என்ற சிறுவன் தன் பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான். ஆளவந்தார் கிராமத்தில் ஒரு செல்வந்தரும் செல்வாக்கு மிக்கவருமாவார். அவர் ஒரு பெண் பித்தர். ஒரு இரவு, அவன் மூக்கனின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவனது தாயை பாலியல் பலாத்காரம் செய்து, அவனது அடியாட்களின் உதவியுடன் அவனது தந்தையைக் கொன்று எரிக்கிறான்.
அவனது தாய் ஆரம்பத்தில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள், ஆனால் சிறுவனைப் பார்த்ததும் தன் மனதை மாற்றிக் கொள்கிறாள், ஆளவந்தார் செய்த அநீதிக்குப் பழிவாங்க மகனை வீரனாக வளர்க்கிறார். அவன் தலையில் ஒரு கொண்டை போட்டு, வில்லனை பழிவாங்குகிற வரையில் அந்த கொண்டயை அவிழ்க்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறாள். வளர்ந்து ஆளாகும் மூக்கன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
இந்த படம் மலையூர் மம்பட்டியான் அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படம். தெலுங்கில் "கால ருத்ரடு" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!