
நான் யார் என்று எனக்கே தெரியவில்லை : மணிரத்னம் பட நடிகை அதிர்ச்சி தகவல்
தனக்கு நடந்த அந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “எனக்கு அந்த விபத்திற்கு பிறகு சுயநினைவு திரும்பிய போது என்னை யார் என்றே எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல என்னை சுற்றி இருந்தவர்களை யார் என்று உணர்வதற்கே எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சிகிச்சையில் இருந்தபோது என்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை என்னிடம் காட்டியபோது அதிர்ந்து போனேன். காரணம் விபத்தால் என் முகமே மாறிவிட்டது. அதுமட்டுமல்ல பழைய நினைவுகள் நிறையவே மறந்து போய்விட்டது. நடப்பது, மற்றவர்களுடன் பேசுவது என்பதை எல்லாமே புதிதாக கற்றுக் கொண்டுதான் செயல்பட ஆரம்பித்தேன்.
பல மாதங்கள் படுக்கையிலேயே இருந்து சிகிச்சை பெற்று அதன் பிறகு யோகாவில் கவனம் செலுத்த துவங்கினேன். யோகா தான் என்னை மீட்டெடுத்து கொண்டு வந்தது. அதன் பிறகு யோகா ஆசிரியராக சான்றிதழும் பெற்று தற்போது யோகா பயிற்சி மையத்தை நடத்தி என்னை போன்ற பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னம்பிக்கை அளித்து வருகிறேன். அதன்பிறகு இந்த 25 வருடங்களில் நான் சினிமா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார் அனு அகர்வால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!