
பிளாஷ்பேக் : தங்கை நடிகையானதால் ஹீரோயின் வாய்ப்புகளை இழந்த குசலகுமாரி
அத்தையுடன் அடிக்கடி படப்பிடிப்புக்கு வரும் குசலகுமாரியை பார்த்த ஜெமினி பட நிறுவனர் வாசன், குலசலகுமாரியை "அவ்வையார்" படத்தில் இளம் வயது அவ்வையாராக நடிக்க வைத்தார். "பராசத்தி" படத்தின் முதல் காட்சியே குலசகுமாரியின் குளோஸ்-அப் காட்சிதான். இந்த படத்தில் "வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற பாடலுக்கு அவர் ஆடினார்.
சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான "கூண்டுக்கிளி"யில் சிவாஜியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஏழைப் பெண் "சொக்கி"யாக நடித்தார். 16 வயதில் "கொஞ்சும் சலங்கை" படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
50 படங்களுக்கு மேல் தனி நடனம் ஆடிய குசலகுமாரி முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக பல படங்களில் நடித்தார். இதனால் அவர் தங்கை நடிகையாவே மாறினார். இதனால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தது. முன்னணி நடிகர்கள் தனக்கு தங்கையாக நடித்தவரை ஜோடியாக ஏற்க மறுத்தனர்.
என்றாலும் அவர் எம்ஜிஆர் தங்கையாக நடிக்காததால் "மலைக்கள்ளன்" படத்தில் நடிக்க அவரை அணுகினார்கள். அப்போது அவர் என்.டி.ராமராவ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் எம்ஜிஆருடன் நடிக்க முடியாமல் போனது.
புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்தாலும் தன் கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாதம் 5 ஆயிரம் உதவி தொகை வழங்கினார். 2019ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார். இன்று அவரது 5வது நினைவு நாள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!