
ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர்
நேற்று முன்தினம் வியாழனன்று மாலை "இதயம் முரளி" படத்தின் அறிவிப்பு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல் முறையாக மேடையேறிப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற "டிராகன்" படத்தின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே, "இதயம் முரளி" நிகழ்ச்சியில் மேடையேறி முதல் முறையாகப் பேசியவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த "டிராகன்" நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது, “இதுதான் என்னுடைய முதல் மேடை, அதனால் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன்,” என பேசி அதிர்ச்சி அளித்தார்.
ஆரம்பத்திலேயே நன்றாகப் பொய் பேசும் கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் பிழைத்துக் கொள்வார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!