
கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்மிகா பேசும் போது தன்னை ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னட மக்களை கோபப்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும் தனது பூர்வீகத்தை ரஷ்மிகா மறக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார் ரஷ்மிகா. அதனால்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் என்றும் சிலர் ரஷ்மிகாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடிக்க ரஷ்மிகா ஆர்வம் செலுத்தி வருவதும் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!