
பழசை மறக்காத சூரி
இந்த நிலையில் சூரி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு கட்டிடத்தில் கயிற்றில் தொங்கிய படி தொழிலாளி ஒருவர் பெயிண்டிங் செய்வதை எதிரே உள்ள ஓட்டலில் தங்கி இருந்த சூரி அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். வீடியோ உடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுவர்களில் நிறங்களை பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன் என்று சூரி பதிவிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சூரி பெயிண்டிங் வேலை செய்பவராக இருந்துள்ளார். அதன் பிறகு லைட் மேன் ஆக சினிமாவில் நுழைந்து பின்னர் காமெடி நடிகராகி, இன்று ஹீரோவாக வளர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் தான் செய்த பழைய தொழிலை மறக்காமல் வீடியோவாக சூரி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!