
மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி?
சுந்தர் சி - விஷால் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. "மத கஜ ராஜா" படத்தின் வெற்றிதான் அதற்குக் காரணம். "ஆம்பள, மத கஜ ராஜா, ஆக்ஷன்" ஆகிய மூன்று படங்களில் இணைந்த கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக இணைய உள்ளது. அந்தப் படமும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. அது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
"துப்பறிவாளன் 2" படத்தை தயாரித்து, இயக்கி நடிக்க உள்ளார் விஷால். அப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த வேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. கவுதம் மேனன், அஜய் ஞானமுத்து ஆகியோரின் இயக்கத்திலும் விஷால் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சுந்தர் சி தற்போது "கேங்கர்ஸ்" என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் வடிவேலு அவருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!