
எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு நானும் ஆண்டனியும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் இப்போது பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. அதோடு நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் மூழ்கி இருப்பேன். அது எனது கணவருக்கு சங்கடமாக உள்ளது. என்றாலும் அவர் அதை குற்றம் குறை சொல்வதில்லை. என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்கிறார். அதனால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக செல்லும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!