
கிருஷ்ணராக நிச்சயம் மகேஷ்பாபு தான் நடிப்பார் : கல்கி இயக்குனர் தகவல்
இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரம் இடம்பெற இருக்கிறது என்றும், அதில் கிருஷ்ணராக மகேஷ்பாபு நடிக்கப் போகிறார் என்றும், சமீபநாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து கல்கி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் கூறும்போது, “கல்கி இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக கிருஷ்ணர் கதாபாத்திரம் இல்லாமல் தான் உருவாக்கி வருகிறோம். அதேசமயம் கிருஷ்ணரை பற்றிய ஒரு முழு நீள திரைப்படம் எடுக்க வேண்டி நாளை ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதில் மகேஷ்பாபு தான் நடிப்பார். கிருஷ்ணருக்கு அவர்தான் பொருத்தமானவர். அப்படி அவர் நடிக்கும் போது அந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறும்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!