
பிளாஷ்பேக் : ‛தென்னகத்து ஹேமமாலினி நடிகை பத்மப்பிரியா
பெங்களூருவை சேர்ந்த பத்மப்பிரியா 1974ம் ஆண்டு "அடபில்லலா தன்றி" என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடத்தில், "பங்காரத குடி" படம் மூலம் அறிமுகமானார். இவர் 1970களின் பிற்பகுதியில் பிரபலமான நடிகையாக இருந்தார். 1978ம் ஆண்டு ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட், தாய்க்கே தக்க மகா, சங்கர் குரு ஆகிய மூன்று கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார், மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. இது இன்று வரை கன்னட சினிமாவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பத்மப்பிரியா தமிழில், "காரோட்டி கண்ணன்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வைர நெஞ்சம், மோகனப் புன்னகை, வாழ்ந்து காட்டுகிறேன், குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் நடித்தார். வைர நெஞ்சம் மற்றும் மோகனப் புன்னகை ஆகிய படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் "தொட்டா சிணுங்கி". அதில் இவர் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.
1983ம் ஆண்டு சீனிவாசன் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வசுமதி என்ற மகள் பிறந்தாள். திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரை பிரிந்த பத்மப்பரியா சினிமாவில் நடிப்பதை கைவிட்டு தனது பெற்றோடன் சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். 1997ம் ஆண்டு மரணம் அடைந்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!