
4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா
சமீபத்தில் பாலா தான் கொச்சியில் இருந்து வேறு இடத்திற்கு மாறப்போவதாகவும் மன அமைதிக்காகவும் உடல் நிலைக்காகவும் தான் இந்த மாற்றம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது கொச்சியை விட்டு 35 கிலோமீட்டர் தள்ளி கோட்டயம் செல்லும் வழியில் இருக்கும் வைக்கம் நகரத்திற்கு குடி புகுந்துள்ளார் பாலா. அதுவும் நகரத்தில் அல்லாமல் அங்கு இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில் தான்.. சமீபத்தில் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு மனைவியுடன் சென்று தரிசனம் செய்த பாலா அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “திருமணம் முடிந்து என் மனைவியை சென்னையிலிருந்து கொச்சிக்கு அழைத்து வந்த போது அவளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. காரணம் கொச்சியில் எனக்கு இருக்கும் பாதுகாப்பற்ற தன்மை தான். இப்போது வைக்கமுக்கு இடம் மாறி உள்ளதால் அவள் ரொம்பவே நிம்மதியாக உணர்கிறாள். இந்த பகுதியில் உள்ள மக்களும் என்னிடம் தற்போது பழக ஆரம்பித்து உள்ளனர். இங்கே நான் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொண்டிருக்கிறேன். பல நோயாளிகளுக்கு உதவி கொண்டிருக்கிறேன். பலருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கிறேன். நாம் எந்த இடத்தில் கால் வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அது நல்லா இடமாக இருக்க வேண்டும்.. அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!