
கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர் வில்லன்
அந்த வகையில் தற்போது கோவாவில் தங்கி இருக்கும் விநாயகன் அங்கு உள்ள தெருவோர கடைக்காரர் ஒருவரிடம் கடுமையான வார்த்தைகளால் சண்டை போடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் கோவாவில் உள்ள ஒரு சாதாரண தெருவில் இருக்கும் ஒரு சின்ன கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் விநாயகன். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் கூட விநாயகன் தனது குடும்ப விஷயம் காரணமாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் என்பதால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!