
110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் சக்தி சிதம்பரம், பேசியதாவது: கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம்.
ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. டெட்பாடியாக பிரபுதேவா நடிக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒன்றரை நாளில் நடக்கும் கதையில் பிரபுதேவா 110 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு "மகளிர் மட்டும்" படத்தில் நாகேஷ் சார் பிணமாக நடித்தது ஒரு போர்ஷன்தான். ஆனால் பிரபுதேவா முழு படத்திலும் அப்படி நடித்திருக்கிறார்” என்றார்.
இந்தப்படம் இன்று(நவ., 22) திரைக்கு வந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!