
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்?
அமரன் படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் மேலும் கவனம் பெற்றுள்ளனர். குறிப்பாக தற்போது இந்த படத்தின் இயக்குனரை தேடி தயாரிப்பாளர்கள் படையெடுக்கின்றனர். அந்தவகையில் தனுஷை வைத்து கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்க போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது இதன் பணிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!