
அமரன் வெற்றி, விஜய் துப்பாக்கி கொடுத்த அதிர்ஷ்டமா?
விஜய் நடித்து வெளிவந்த "தி கோட்" படத்தின் கிளைமாக்சில் விஜய் அவரிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து "துப்பாக்கிய புடிங்க சிவா" என்று வசனம் பேசியிருப்பார். விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்தான் என விஜய்யே முடிவு செய்துவிட்டார் என படம் வெளிவந்த போது பரபரப்பாகப் பேசினார்கள். அதனால், மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இது பற்றி நிறையவே கமெண்ட் செய்தார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த "அமரன்" படத்தின் முதல் நாள் வசூலே 42 கோடி என வந்தது. நேற்றைய வசூல் நிச்சயம் 50 கோடி வந்திருக்கலாம் என்று தகவல். இன்றைய வசூல், நாளைய வசூல் ஆகியவை சேர்த்தால் 200 கோடியை நான்கே நாட்களில் நெருங்கும் வாய்ப்புள்ளது.
இதனால், விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்யிடமிருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கிய அதிர்ஷ்டம் "அமரன்" படம் அமோகமாக வசூலிக்கிறது என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். ராணுவ அதிகாரியாக, விஜய் துப்பாக்கியைத் தூக்கி சண்டை போட்ட "துப்பாக்கி" படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து முதல் 100 கோடியை வசூலித்துத் தந்தது. அது போலவே "அமரன்" படத்திலும் சிவா, ராணுவ அதிகாரியாக நடித்து துப்பாக்கியைத் தூக்கி சண்டை போட்டுள்ளார் என இரண்டு படத்துக்கும் "கனெக்ட்" செய்து பேசி வருகிறார்கள்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…."துப்பாக்கி" படத்தை விடவும் "அமரன்" வசூல் போகப் போக அதிகமாக வரும் என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!