
மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - தமன்னாவிடம் அமலாக்கத்துறை திடீர் விசாரணை
இது தொடர்பாக நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா பகுதி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடந்த மார்ச் மாதம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். "எச்.பி.இசட் டோக்கன்" செல்போன் செயலி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று தமன்னா ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தமன்னாவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
விசாரணையில் அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட தமன்னா அது மோசடி நிறுவனம் என்று அப்போது தனக்குத் தெரியாது என்றும், தேவைப்பட்டால் அந்த பணத்தை திருப்பி ஒப்படைப்பதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!