
5 வருஷம் கழிச்சு ரொமான்டிக் படம் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ் தகவல்
அக் 13, 2024
Advertisement
மாநகரம் என்ற படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு கைதி , மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் . அப்போது அவரிடத்தில், வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் காதல் கதையில் எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு...
அவர் பதில் அளிக்கையில், தற்போது நான் எடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் அதே கோணத்தில் யோசித்து வருகிறேன். கூலி படத்தை அடுத்து விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் வேடத்தை இன்னும் பெரிய அளவுல டெவலப் பண்ணி ஒரு படம் எடுக்க போறேன். அதுக்கு அப்புறம் கைதி 2 எடுக்க போறேன். இது மாதிரி நான் கமிட் ஆயிருக்கிற படங்களை இயக்கி முடிப்பதற்கு இன்னும் 5 வருஷம் ஆயிடும். அதனால அதன்பிறகு ரொமான்ஸ் காதல் கதையில் படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அவர் பதில் அளிக்கையில், தற்போது நான் எடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் அதே கோணத்தில் யோசித்து வருகிறேன். கூலி படத்தை அடுத்து விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் வேடத்தை இன்னும் பெரிய அளவுல டெவலப் பண்ணி ஒரு படம் எடுக்க போறேன். அதுக்கு அப்புறம் கைதி 2 எடுக்க போறேன். இது மாதிரி நான் கமிட் ஆயிருக்கிற படங்களை இயக்கி முடிப்பதற்கு இன்னும் 5 வருஷம் ஆயிடும். அதனால அதன்பிறகு ரொமான்ஸ் காதல் கதையில் படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!