
பிளாஷ்பேக் : நடிகராக தோற்று இயக்குனராக ஜெயித்த பி.ஆர்.பந்துலு
கர்நாடக மாநிலம், கோலாரில் பிறந்தவர் பந்துலு. பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பதுதான் முழுப்பெயர். அடிப்படையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம். 1937ம் ஆண்டு "ராஜபக்தி" எனும் கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறிய கேரக்டர்தான் என்றாலும் நிறைய பாராட்டு கிடைத்தது. இதனால் நடிப்பில் கூடுதல் ஆர்வம் ஆனார். ஆனாலும் தொடர்ந்து சிறிய கேரக்டர்கள்தான் கிடைத்தது.
கன்னடத்தில் சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டு தமிழுக்கு வந்தார். 1952ல், கலைவாணரின் "பணம்" படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் சிவாஜியும் நடித்தார். அதன் பிறகு "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" படத்தில் சிவாஜியுடன் மீண்டும் நடித்தார். இந்த கால கட்டத்தில் இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். ஒரு கட்டத்தில் பந்துலு பணக்காரர் என்பதால் சிவாஜியை வைத்து தமிழ் படம் ஒன்றை தயாரித்து, இயக்க விரும்பினார். சிவாஜியும் ஒப்புதல் தரவே "பத்மினி பிக்சர்ஸ்" என்று நிறுவனத்தை தொடங்கி "தங்கமலை ரகசியம்" படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட். அதன்பிறகு நடிப்பை கைவிட்ட பந்துலு தொடர்ந்து பல படங்களை இயக்கினார். சிவாஜியை வைத்து அதிமான படங்களை இயக்கினார். பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை இயக்கினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!