
நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம் : தெலுங்கு பிலிம் சேம்பர் அதிரடி
இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் தற்போது ஜானி மீதான விசாரணையைத் துவக்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அதாவது 2019ம் ஆண்டிலிருந்தே அந்தப் பெண் நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். ஒரு மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் அந்த சங்கத்தினரை தெலுங்கு பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம். அதில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர் சார்பா அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!