
வாடகை பாக்கி பிரச்னை : யுவனிடம் போலீசார் விசாரிக்க முடிவு
அதில், யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார். தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். மேலும் நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து சென்றுள்ளார். யுவனிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்" எனத் தெரிவித்து இருந்தார்.
இதை மறுத்த யுவன், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க வீட்டு உரிமையாளர் முயற்சிப்பதாக கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இசை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக யுவனிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவெடுத்துள்ளனர். விரைவில் அவர் போலீசில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!