
கண்ணீருடன் தான் வீடு திரும்புவேன் : ராஷ்மிகா
ஆக 14, 2024
Advertisement
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியில் பிரபலமாகி விட்டார் நடிகை ராஷ்மிகா. தற்போது தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் குபேரா, ஹிந்தியில் ஜாவா, சிக்கந்தர் போன்ற படங்களில் நடிக்த்து வருகிறார். இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு ஏற்ற முகம் இல்லை என கூறி ஆரம்பத்தில் பலரும் என்னை நிராகரித்தார்கள். ஆடிஷன் போய்விட்டு வீட்டிற்கு வந்தாலே கண்ணீருடன் தான் வருவேன். கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்தேன். கஷ்டப்பட்டு ஒரு படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று மாதங்கள் பயிற்சி நடந்தது. பின்னர் அந்த படமும் நின்றுவிட்டது. பிறகு சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை"" என்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!