
‛கொட்டுக்காளி படத்தை மக்கள் வந்து பார்க்க நிர்வாணமாகவும் ஆடத் தயார் : மிஷ்கின் பேச்சு
அவர் பேசியதாவது : இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட விழாவில் தான் வினோத் ராஜை சந்தித்தேன். இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என கேட்டேன். அவன் யாருமே கிடையாது என்றான். என்ன இவன் பெரிய ஆள் போல பேசுகிறான் என தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்த்த பின் வினோத் என்னை செருப்பை கழற்றி அடித்திருக்கிறான் என தெரிகிறது.
சமீபத்தில் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று வாழை. அதை பார்த்த பின் ஒருவாரம் தூக்கமே வரவில்லை. மற்றொன்று கொட்டுக்காளி. இந்த படத்தை பார்த்த பின் எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்துவிட்டது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. இதை மக்கள் வந்து பார்க்க நான் நிர்வாணமாக கூட ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். காரணம் சினிமா பார்க்க வருவதே நிர்வாணமாக ஆடுவதை பார்க்கத்தானே. இன்றைக்கு 16 வயதினிலே மாதிரியான படங்கள் எடுத்தால் பார்ப்பார்களா என தெரியவில்லை. இந்த படம் என் தாயின் கருவறை, என் மகளின் யோனி. வினோத்தின் காலை நான் தொட்டு முத்தமிடும் அளவுக்கு இந்த படத்தை அவன் எடுத்திருக்கிறான். இளையராஜாவிற்கு பின் வினோத் காலை நான் முத்தமிடுவேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!