
சூர்யா நலமாக இருக்கிறார் : ரசிகர்களை அமைதிப்படுத்திய தயாரிப்பாளர்
இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூர்யா ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் சூர்யாவின் நண்பரும் அவரது 2டி நிறுவன தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் இதுகுறித்து சூர்யா ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக, “அன்பான ரசிகர்களே. அது வெறும் சிறிய காயம் தான். அதனால் கவலைப்பட வேண்டாம். உங்களது அன்பாலும் பிரார்த்தனையாலும் சூர்யா அண்ணா தற்போது நன்றாக இருக்கிறார்” என்று ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!