
தோழியை இழந்த துயரத்தில் கீர்த்தி சுரேஷ்
அதில் அவர் கூறும்போது, “21 வயதில் பிரைன் ட்யூமர் நோய்க்காக டயக்னைஸ் செய்ய ஆரம்பித்து கடந்த எட்டு வருடங்களாக நோய்க்கு எதிராக அவள் போராட்டம் நடத்தி வந்தாள். ஒரு நாள் அவளை மருத்துவமனையில் சந்தித்தபோது என்னால் தாங்க முடியவில்லை என்றாலும் அவள் முன்பாக எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினேன், கடைசியாக அவளை நான் சந்தித்தபோது சுயநினைவின்றி இருந்தாள். அதன் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை. எனக்கு தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால், இதுபோன்ற ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பே, அவர் இந்த உலகத்தை முழுதுமாக பார்ப்பதற்கு முன்பே, அவளுடைய விருப்பங்கள் கனவுகள் எதுவுமே நிறைவேறாததற்கு முன்பே எதற்காக இப்படி நடக்க வேண்டும் ? எனக்கு இப்போதும் விடை தெரியவில்லை. நீ இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டாலும் கூட தினசரி உன்னை பற்றி நினைவு வராத நாளே இல்லை” என்று உருக்கமாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!