
திருச்செந்தூர் கோயிலில் ரசிகரின் செயலால் சங்கடத்திற்கு ஆளான ஏ.ஆர் முருகதாஸ்
அப்படி ஏ.ஆர்.முருகதாஸ் தனது சட்டையை கழட்டும் போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஆர்வம் மிகுதியால் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். இதனால் சங்கடமாக உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அந்த ரசிகரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வீடியோ எடுக்க துவங்க உடன் வந்த தனது உதவியாளர்களிடம் அதை கவனித்து தடுக்குமாறு கூறினார்.
ஆனாலும் அந்த ரசிகர் முருகதாஸின் உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் பலரது கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பலரும் ஏ.ஆர் முருகதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருவதுடன், பிரபலங்களின் பிரைவசியில் எந்நேரமும் தலையிட்டு கொண்டிருக்கக் கூடாது என அந்த வீடியோ எடுத்த சம்பந்தப்பட்ட ரசிகரையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!