
நடிகர் சங்கம் உதவுங்க... கண்ணீர் மல்க மடிப்பிச்சை கேட்கும் காமெடி நடிகை வாசுகி
அதில் ‛‛ஜெயலலிதா புகைப்படம் பதித்த பெரிய டாலர் செயின், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோவுக்கு கொலுசு இதெல்லாம் போட்டிருந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு கஷ்டம். அதனால் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். எனக்கு கர்ப்ப பையில் 3 கட்டி இருந்தது. அதையும் எடுத்துவிட்டார்கள்.
இங்குள்ள நடிகர் சங்கம் செய்யாத உதவியை தெலுங்கு நடிகர் சங்கம் செய்தது. மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு அங்குள்ள நடிகர் சங்கத்தில் அவரே பணம் கட்டி என்னை உறுப்பினராக்கினார். சிரஞ்சீவி, நாகேந்திரபாபு ஆகியோர் பணம் தந்தார்கள். தெலுங்கு மக்களும் பணம் தந்தார்கள். அதை வைத்து கண் ஆபரேஷன் செய்தேன். ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து சாப்பிட்டு வருகிறேன்.
எனக்கு தங்குவதற்கு ஒரு இடமும், வேலையும் கொடுத்தால் போதும் நான் பிழைத்துக் கொள்வேன். தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு ஆந்திராவில் உதவுகிறார்கள். ஆனால் இங்குள்ள நடிகர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது நான் ரோடு ரோடாக திரிகிறேன். நாசர், கார்த்தி, விஷால் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள், மடிப்பிச்சை கேக்கிறேன்"" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!