
பவுன்சரால் தள்ளிவிடப்பட்ட ரசிகரை வரவழைத்து சமாதானப்படுத்திய நாகார்ஜூனா
அதன்பிறகு மறுநாள் படப்பிடிப்பிற்காக சென்றபோது பவுன்சர்களை ஒதுங்கி நிற்க சொல்லிவிட்டு, தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். நாகார்ஜூனாவின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் அதே மும்பை விமான நிலையத்திற்கு வந்த நாகார்ஜூனா, எப்படியோ தனது ஆட்கள் மூலமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுன்சர் மூலமாக தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை அழைத்து வரச் செய்து அவருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இன்றைய சந்திப்பிலும் அந்த ரசிகர் அதே நிற உடையை அணிந்திருந்தார் என்பது ஆச்சர்யம். அதுமட்டுமல்ல அன்று அவரை தள்ளிவிட்ட அந்த பவுன்சரும் அந்த ரசிகரின் கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி நாகார்ஜூனா மீதான சர்ச்சையை முழுவதுமாக நிவர்த்தி செய்து விட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!