
வெப் தொடரில் யக்ஷினியாக மிரட்டும் வேதிகா
குபேரனிடம் சாபம் வாங்கும் மாயா எனும் யக்ஷினி அந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் அடைய வேண்டும் என்றால் 100 ஆண்களுடன் உறவு கொண்டு பின்னர் அவர்களை கொலை செய்ய வேண்டும். 99 பேரை கொல்லும் யக்ஷினி கடைசியாக 100வது ஆளாக ஹீரோவை சந்திக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். சாப விமோசனமா, காதலா இதில் யக்ஷினி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் தொடரின் கதை.
இந்த தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வேதிகாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து வேதிகா கூறும்போது “அதிக சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கும்போது கூடுதல் பொறுப்பு இருக்கும். இந்தக் கேரக்டர் நீண்ட நேரம் உருவானாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. யக்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, எனக்கு உடல்ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேக்கப் அணிந்து கலைக்க பல மணி நேரமானது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்துக்கும் இப்போது பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!