
எஸ்பிபி நினைவாலய பணிகளை ஆரம்பித்த எஸ்பி சரண்
கடந்த 2020ம் வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல், திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நினைவாலயம் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளார் அவரது மகன் எஸ்பி சரண்.
“சொர்க்கத்தின் ஆசியில், எனது கனவு திட்டத்தை இன்று ஆரம்பித்துவிட்டேன்… எஸ்பிபி மெமோரியல்,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!