
சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்
மே 20, 2024
Advertisement
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய "விடுதலை" படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரி அடுத்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் "கருடன்". ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை(மே 21) சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் தனி கதாநாயகனாக நடித்து முதல் வெற்றியைப் பெற்ற "எதிர்நீச்சல்" படத்தை இயக்கியவர்தான் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான "காக்கி சட்டை" படமும் வெற்றி பெற்ற படம்தான்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருமே நாளை ஒன்றாகக் கலந்து கொள்ளும் விழா என்பதால் "கருடன்" இசை வெளியீட்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.
சூரி அடுத்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் "கருடன்". ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை(மே 21) சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் தனி கதாநாயகனாக நடித்து முதல் வெற்றியைப் பெற்ற "எதிர்நீச்சல்" படத்தை இயக்கியவர்தான் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான "காக்கி சட்டை" படமும் வெற்றி பெற்ற படம்தான்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருமே நாளை ஒன்றாகக் கலந்து கொள்ளும் விழா என்பதால் "கருடன்" இசை வெளியீட்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!