
போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர் இது போன்ற டிரோல்களை நிறைய சந்தித்தார். ஆனால் அதை எதிர்கொள்வதற்காக, பதிலடி தருவதற்காக இவர் புத்திசாலித்தனமாக சில மாற்று வழிகளை கையாண்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.
அதாவது யாருக்கும் தெரியாமல் சில போலி கணக்குகளை சோசியல் மீடியாவில் உருவாக்கி அதன்மூலம் தன்னுடைய பதிவுகளில் முறையற்ற வகையில் விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு பெயரில் பதிலடி கொடுக்க துவங்கினாராம். ஆனால் இப்படி நான் செய்வது இதுவரை யாருக்குமே தெரியாது. ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டே போகட்டும் என அப்படியே விட்டுவிட முடியாது. அவர்கள் எல்லை மீறும்போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அமைரா தஸ்தூர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!