
ஹீரோயின் ஆன சஞ்சனா சிங்
படம் பற்றி காளிமுத்து காத்தமுத்து கூறும்போது “வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் பேசும் படம். ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்” என்றார்.
"ரேணிகுண்டா" படத்தில் பாலியல் தொழிலாளியாக அறிமுகமான சஞ்சனா சிங் அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். அஞ்சான், தனி ஒருவன், நாய் சேகர் ரிட்டன் ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்த நிலையில் "வேட்டைக்காரி" படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!