
ஆடு ஜீவிதம் படத்திற்கு சூர்யா வாழ்த்து
இந்த வருடத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் சில வெற்றிகளையும், தரமான படங்களையும் கொடுத்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வரவில்லை.
"ஆடுஜீவிதம்" படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “"ஆடுஜீவிதம்". உயிர் வாழ்வதற்குரிய ஒரு கதையைச் சொல்ல 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இது போன்ற மாற்றமும், முயற்சியும் ஒன்றாக இணைவது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும். இயக்குனர் பிளஸ்ஸி, மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்விராஜ் தன்னுடைய நண்பர் என்பதால் ஒரு மலையாளப் படத்திற்கு வாழ்த்து சொல்லும் சூர்யா, இது போல தமிழ் சினிமாவில் வெளிவரும் நல்ல படங்களையும் பாராட்டினால் அந்தப் படங்களும் கொஞ்சம் ஓடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!