
போர் கலப்பிடமில்லாத தமிழ் படம் : இயக்குனர் பிஜோய் நம்பியார்
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் பிஜோய் நம்பியார் பேசியதாவது: ஒரு நேரடியான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சிதான் இந்த படம். ஷோலோ படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போனது. ‛போர்" ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள்.
இது ஒரு கலப்படமற்ற முழு தமிழ் படம். கல்லூரி கால வாழ்க்கைத் தொடர்பான படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ் பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் மூன்றாவது முயற்சி. இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு "போர்" என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றிர்யதால் அதனையே தலைப்பாக வைத்திருக்கிறேன் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!