
பவன் கல்யாண் படத்தை பாதியில் நிறுத்திவிட்டு அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்
இந்தப் படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். கடந்த 2010ல் அனுஷ்காவின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் விதமாக வெளியான வேதம் படத்தை தொடர்ந்து 15 வருடங்கள் கழித்து அனுஷ்காவின் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்காக மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் கிரிஷ். ஷீலாவதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒடிசாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தை கிரிஷ் இயக்கி வந்தார். சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாமல் தள்ளித்தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் அந்த படத்தை அப்படியே தள்ளி வைத்துவிட்டு அனுஷ்காவின் படத்தை இயக்கத் துவங்கி விட்டார் இயக்குனர் கிரிஷ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!