
கதை நாயகனாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் அக்கரன்
படம் குறித்து அவர் கூறும்போது "அக்கரன் என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள் என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா, பிரியதர்ஷனி ஆகியோரில் ஒருவர் படிக்கிறார். இன்னொருவர் வீட்டில் இருக்கிறார்.
அவரது மகள்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
உடல் பலத்தால் அவர்களை எதிர்க்க முடியாத எம்.எஸ்.பாஸ்கர் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி அவர்களை கண்டுபிடித்து பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. பழிவாங்கிய பிறகு அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதும் படத்தில் சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!