
அரசியல் கட்சி துவங்கிய விஜய்க்கு நான்கு நாட்கள் கழித்து வாழ்த்து சொன்ன ரஜினி
விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து இருந்தார் விஜய். இந்நிலையில் பிப்., 2ல் கட்சி துவங்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்க்கு நான்கு நாட்கள் கழித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் விஜய் கட்சி துவங்கியது பற்றி கேள்வி கேட்டதற்கு ‛வாழ்த்துகள்" என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார் ரஜினி.
‛சூப்பர் ஸ்டார்" பட்டத்தை வைத்து ரஜினி, விஜய் ரசிகர்கள் மாறி மாறி சண்டையிட்டு வந்தனர். அதிலும் ரஜினி சொன்ன காக்கா - கழுகு கதை வைரலாகி இந்த சண்டையை இன்னும் தீவிரமாக்கியது. சமீபத்தில் லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் காக்கா - கழுகு கதையை வைத்து சண்டையிடுவதை நிறுத்துங்கள், நான் விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை என ரஜினி இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!