
ஸ்கூல் ஆசிரியையாக நடிக்கும் பூமிகா
குவாண்டம் பிலிம் பேக்டரி சார்பில் ஆர்.கே.வித்யாதரன் மற்றும் கே.மஞ்சு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பக்ஸ், சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.கே.வித்யாதரன்.
படம் பற்றி இயக்குனர் வித்யாதரன் கூறும்போது “இது முழுக்க முழுக்க ஸ்கூலில் நடக்கும் கதை. ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம். அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்லவிருக்கிறோம்.
மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும், மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் கிரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே.எஸ் ரவிகுமாரும் நடிக்கிறார்கள்” என்றார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!