
அது ஆயுர்வேத பீடி மட்டும் தான் : மகேஷ்பாபு
சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் புகை பிடிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நிஜமாகவே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் புகை பிடிப்பதை எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார் மகேஷ்பாபு.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இந்த படத்தில் முதல் நாள் நிஜமான பீடி பிடித்தபோது அதனால் ஏற்பட்ட தலைவலியை என்னால் தாங்க முடியவில்லை. அதற்கு பிறகு இதுபற்றி இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் கூறியபோது, இந்த ஆயுர்வேத பீடியை உபயோகிக்க முடிவு செய்தோம். இதை புகைத்தபோது மனதிற்கு மட்டுமல்ல மூளைக்குமே நல்ல சுறுசுறுப்பு ஏற்பட்டது. அதன் புகையால் ஏற்பட்ட நறுமணம் கூட இனிமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!