
பொன்னியின் செல்வன் படம் புரியவே இல்லை : ஸ்ரேயா ரெட்டி
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு வட்டமேஜை உரையாடலின்போது பேசிய ஸ்ரேயா ரெட்டி பொன்னியின் செல்வன் படத்தின் கதை தனக்கு புரியவே இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இவர் இப்படி கூறுவதற்கு முன்பாக பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் பேசும்போது பொதுவாக வரலாற்று படங்களை கொடுப்பவர்கள் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டால் அவர்கள் படத்தை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். அதற்காக முழு கதையையும் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.
அவர் கூறிய அந்த விஷயத்தை மேற்கோள் காட்டி பேசிய ஸ்ரேயா ரெட்டி, பொன்னியின் செல்வன் கதை எதை நோக்கி நகர்கின்றது என்றே தனக்கு புரியவில்லை என்றும் கதாபாத்திரங்கள் மீதான குழப்பமும் தனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுக்களை வெற்ற நிலையில் நடிகை ஸ்ரேயா ரெட்டி இவ்வாறு கூறியுள்ளது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!