
எண்ணெய் கழிவுகளை அகற்ற பாத்ரூம் பக்கெட்டுகளை கொடுப்பதா? - கமல்ஹாசன் ஆவேசம்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் எண்ணூர் பகுதியில் ஆய்வு செய்தார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்த பகுதிக்கு ஏற்கனவே நான் பலமுறை வந்திருக்கிறேன். கடந்த காலத்தை விட இந்த முறை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இங்கு உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் அதற்கான ஒரு அறிகுறியும் இங்கு இல்லை. எண்ணெய் கழிவுகளை அகற்ற நிபுணர்கள் இல்லை. மீனவர்கள் தான் அகற்றி வருகிறார்கள்.
ஆனால் எண்ணெய் கழிவுகளை அகற்ற பக்கெட்டை கொடுத்து இருப்பது மனிதாபிமானமற்ற செயல். உயிர் கொல்லி வேலைகளை செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கும் கமலஹாசன், ஒவ்வொரு முறையும் இது போல நடக்கும்போது நிவாரணம், போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!