
பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் இரண்டு தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். "ஜவான்" படத்தில் அறிமுகமான நயன்தாரா, "அனிமல்" படத்தில் நடித்த ராஷ்மிகா தான் அந்த இருவர். நயன்தாரா தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் ஹிந்தியில் இந்த வருடம்தான் அறிமுகமானார். ராஷ்மிகா மந்தனா இதற்கு முன்பு "குட்பை, மிஷன் மஞ்சு" ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் அவருக்குக் குறிப்பிடும்படியாக அமையவில்லை. ஆனால், "அனிமல்" படம் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துவிட்டது.
நயன்தாரா, ராஷ்மிகா இருவரும் அடுத்து வேறு எந்த ஹிந்திப் படங்களிலும் நடிப்பதற்கு இதுவரை சம்மதிக்கவில்லை. நயன்தாரா தமிழ்ப் படங்களிலும், ராஷ்மிகா தெலுங்குப் படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!