
தைரியம் என்பது எனது பெயர் : கெத்து காட்டும் குஷ்பு
குஷ்பு இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் அதனால் அவர் இலங்கைக்கு வரக்கூடாது என்று அங்குள்ள சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் குஷ்பு விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“நான் யாருக்கும் பயப்படவில்லை. இலங்கையில் ஹரிகரன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நான் விலகிய காரணம் எனது மாமியாரின் உடல்நிலை. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எனது முன்னுரிமை அவரது ஆரோக்கியத்துக்குத்தான். பெயர் தெரியாதவர்கள், முகம் தெரியாதவர்கள் என்னை ஒருபோதும் மிரட்ட முடியாது. தயவு செய்து வேறு கதவை தட்டுங்கள். தைரியம் என்பது எனது பெயர்"" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!