
சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச ஊழல் புகார் : 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு
இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார் விஷால். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிப்பரப்புதுறை அமைச்சகம், விஷாலின் புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகளை மும்பை அனுப்பி வைத்தது. உடன் நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார் விஷால்.
இந்நிலையில் சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ., வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. இதுதொடர்பாக மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!