
உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வாட்ஸ் அப் அட்மின்கள் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பரப்பும் உறுப்பினர்களோடு மற்ற உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!