
பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான ‛லால் சலாம்" படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் ‛லால் சலாம்" படத்திற்கான ரஜினியின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்டை இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வெளியான அறிவிப்பில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!