
விஜய்யின் ‛லியோ படத்திற்கு ஆளும் கட்சி மிரட்டலா? - தயாரிப்பாளர் மறுப்பு
அதில், லியோ படத்தின் இசை விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திமுக அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இந்த படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை தங்களுக்கு கொடுத்தால் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திமுக தரப்பு தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அந்த செய்தியை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மையில்லை. முற்றிலும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!