
சந்திரமுகி 2 வெளியீடு தள்ளிப் போனது ஏன் ?
செப்டம்பர் 15ம் தேதி வெளியான "மார்க் ஆண்டனி" படத்தின் டிரைலருக்கு "சந்திரமுகி 2" டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை விட மிக அதிகமாக இருந்தது. அந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல்தான் "சந்திரமுகி 2" வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கான விளக்கத்தை இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
“பட வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக டி.ஐ. செய்பவர்களிடமிருந்து திடீரென போன் வந்தது. படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை என்றார்கள். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியானது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிஜி, டிஐ, கிராபிக்ஸ் என பல இடங்களில் அதைத் தேடினோம். 150 டெக்னீஷியன்கள் ஒரு எபிசோடுக்காக வேலை செய்தார்கள். எங்களுக்கு மிகவும் குழம்பிய நிலையில் நான்கைந்து நாட்களுக்குப் பிறகே எங்களுக்கு அந்தக் காட்சிகளை கண்டுபிடிக்க முடிந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை, எங்களுக்கும் அது ஆபத்தானதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் படத்தைத் தள்ளி வைத்தோம்,” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!